தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகையிலை மற்றும் பான்மசாலா போன்றவை தடை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, தடையை மீறி இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
அதன்படி, அவ்வப்போது தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த பான்மசாலா-வை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போதை பீடாவினை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

போதை பீடா:-
உண்ட உணவு செரிமானம் அடைவதற்காக, நன்றாக சாப்பிட்ட பின் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு மற்றும் வெட்டுப்பாக்கு இட்டு அதை நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். அந்த கலாச்சாரம் சற்றே மாறி வெற்றிலையுடன் ‘குல்கந்த்’ சேர்த்து ‘ஸ்வீட் பீடா’ என்ற பெயரில் இந்த தலைமுறையினர் உண்டுவருகின்றனர்.
இந்நிலையில், அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்பட்டு வந்த வெற்றிலை பல இடங்களில் போதை பொருளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பீடா கடைகளில் வெற்றிலையின் மீது அதிக அளவிலான பான்மசாலா மற்றும் போதை வஸ்துகள் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப போதை அளவை அதிகரிக்கும் விதமாக 120, 420, 840 என்று பல்வேறு வகைகளாக விற்பனையாகும் இந்த போதை பீடாக்களை புதிதாக ஒருவர் சுவை பார்த்தால், அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுவார். அந்த அளவிற்கு அதிக அளவிலான போதை பொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது.
ஜோர் விற்பனை:-
கோவையின் பல இடங்களில் போதை பீடா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உக்கடம், ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போதை பீடா விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கடைகளில் ஸ்வீட் பீடா மற்றும் ஐஸ் பீடா விற்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தி போதை பீடா தயாரிக்கப்படுகிறது.

இவ்வகை பீடாக்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பதை மறந்து சுதந்திரமாக அவற்றை விற்பனை செய்துவருகின்றனர் பீடா கடைக்காரர்கள். இப்பகுதிகளுக்கு வரும் பீடா பிரியர்கள் அதிக போதை தரும் பீடாக்களை வாங்கி சுவைக்கின்றனர். அதோடு, பொது இடங்களில் எச்சில் உமிழ்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இப்படியான போதை பீடாக்களை விற்பனை செய்பவர்கள் மீது அந்த பகுதி காவல் துறையினரோ, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளோ அல்லது NIB என்ற போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்தும் சிறப்பு அமைப்போ நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், போதை பீடா விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவ்வகை போதை பீடாக்கள் மாரடைப்பு, வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய வியாதிகளை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அவ்வப்போது தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த பான்மசாலா-வை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போதை பீடாவினை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

போதை பீடா:-
உண்ட உணவு செரிமானம் அடைவதற்காக, நன்றாக சாப்பிட்ட பின் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு மற்றும் வெட்டுப்பாக்கு இட்டு அதை நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். அந்த கலாச்சாரம் சற்றே மாறி வெற்றிலையுடன் ‘குல்கந்த்’ சேர்த்து ‘ஸ்வீட் பீடா’ என்ற பெயரில் இந்த தலைமுறையினர் உண்டுவருகின்றனர்.
இந்நிலையில், அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்பட்டு வந்த வெற்றிலை பல இடங்களில் போதை பொருளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பீடா கடைகளில் வெற்றிலையின் மீது அதிக அளவிலான பான்மசாலா மற்றும் போதை வஸ்துகள் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப போதை அளவை அதிகரிக்கும் விதமாக 120, 420, 840 என்று பல்வேறு வகைகளாக விற்பனையாகும் இந்த போதை பீடாக்களை புதிதாக ஒருவர் சுவை பார்த்தால், அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுவார். அந்த அளவிற்கு அதிக அளவிலான போதை பொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது.
ஜோர் விற்பனை:-
கோவையின் பல இடங்களில் போதை பீடா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உக்கடம், ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போதை பீடா விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கடைகளில் ஸ்வீட் பீடா மற்றும் ஐஸ் பீடா விற்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தி போதை பீடா தயாரிக்கப்படுகிறது.

இவ்வகை பீடாக்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பதை மறந்து சுதந்திரமாக அவற்றை விற்பனை செய்துவருகின்றனர் பீடா கடைக்காரர்கள். இப்பகுதிகளுக்கு வரும் பீடா பிரியர்கள் அதிக போதை தரும் பீடாக்களை வாங்கி சுவைக்கின்றனர். அதோடு, பொது இடங்களில் எச்சில் உமிழ்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இப்படியான போதை பீடாக்களை விற்பனை செய்பவர்கள் மீது அந்த பகுதி காவல் துறையினரோ, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளோ அல்லது NIB என்ற போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்தும் சிறப்பு அமைப்போ நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், போதை பீடா விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவ்வகை போதை பீடாக்கள் மாரடைப்பு, வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய வியாதிகளை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.