தமிழகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது சிபிஐ முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரு நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சி, காவிரி நதிநீர் ஆணைய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற 29ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பேரியக்கம் நடத்தப்படும் எனவும் 6 பயணக்குழுக்களாக பிரிக்கப்பட்டு 1000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 5ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, யெச்சூரி தாக்கப்பட்டதற்கும், மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு மணல் விலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...