தமிழகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது சிபிஐ முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரு நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சி, காவிரி நதிநீர் ஆணைய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற 29ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பேரியக்கம் நடத்தப்படும் எனவும் 6 பயணக்குழுக்களாக பிரிக்கப்பட்டு 1000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 5ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, யெச்சூரி தாக்கப்பட்டதற்கும், மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு மணல் விலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...