கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
மேலும், கலைஞர் மிக சிறந்த இலக்கியவாதி என்றும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், காவிரி நதி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தைக் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் துணை போகிறது என்றும் குற்றம் சாட்டினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்ப்பதாகவும் கூறியதுடன் இதனை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் இல்லைவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, கலைஞர் ஒரு மிகசிறந்த இலக்கியவாதி மிக சிறந்த ராஜதந்திரி எனவும் அவருடைய எழுத்துகள், பேச்சுகள் மற்றும் அவருடைய நினைவு திறன் தன்னை வியக்க வைத்துள்ளது எனவும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை எனவும் புகழாரம் சூட்டினார். வைர விழாவிற்க்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் வைர விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.