மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு, மீண்டும் முக்கிய பதவியான கட்சித் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


கோவை: அதிமுகவில் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவருமான S.P. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் நத்தம் R. விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, கட்சியை மீறி தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் S.P. வேலுமணி, C.V. சண்முகம் உள்ளிட்டோர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணி அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது S.P. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அதிமுகவில் புதிய அரசியல் சமநிலைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தலைவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...