மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு, மீண்டும் முக்கிய பதவியான கட்சித் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


கோவை: அதிமுகவில் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவருமான S.P. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் நத்தம் R. விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, கட்சியை மீறி தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் S.P. வேலுமணி, C.V. சண்முகம் உள்ளிட்டோர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணி அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது S.P. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அதிமுகவில் புதிய அரசியல் சமநிலைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தலைவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...