அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ளிட்ட ஆதரவு முழக்கங்களை எழுப்பிய அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்வுகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னை புறப்பட்டார்.

இதையொட்டி, அவரை வழியனுப்புவதற்காக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையம் முன்பாக திரண்டிருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கு காத்திருந்த தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, “காசுக்கு விலை போக மாட்டோம்”, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி”, “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு முழக்கங்களுடன் சென்னைக்கு வழியனுப்பினர்.
தொண்டர்கள் திரளாக குவிந்ததாலும், தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதாலும், கோவை விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையொட்டி, அவரை வழியனுப்புவதற்காக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையம் முன்பாக திரண்டிருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கு காத்திருந்த தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, “காசுக்கு விலை போக மாட்டோம்”, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி”, “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு முழக்கங்களுடன் சென்னைக்கு வழியனுப்பினர்.
தொண்டர்கள் திரளாக குவிந்ததாலும், தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதாலும், கோவை விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.