திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையின் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோயிலை திறந்து வழக்கமான பூஜைக்காக சென்றபோது, மூலவர் சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர் இரும்புக் கம்பி கொண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோயிலுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதே கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு முயற்சி நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...