கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. பதிவுக்கு பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


கோவை: தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாட்டை ஒட்டி, சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 5 வரை கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கோவை மாவட்டம் சார்பில் சிறந்த அறிவியல் சிந்தனை கொண்ட கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் புதிய போக்குகள் மற்றும் மாற்றத்திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி (CIT) இணைந்து, 2026 ஜூன் 3 முதல் 5 வரை CIT வளாகத்தில் 4வது "தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு (AMCEHA 2026)" நடத்துகின்றன.


புதுமைகாண் அமர்வு நடைபெறும்




இந்த சர்வதேச மாநாட்டில் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநாட்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு "புதுமைகாண் அமர்வு" (Innovation Showcase) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைவர் Dr. கலைச்செல்வி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இதில் சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனைவரும் பங்கேற்கலாம்




இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களில் புதுமையான சிந்தனைகளை முன்வைப்பவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாக அமையும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...