முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தவும், இரண்டு நாட்களையும் துக்க நாளாக அறிவிக்கவும் கோரியுள்ளார்.


Coimbatore: முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்றும், அந்த நாட்களை துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐடி ஊழியர் ஒருவர் மனு அளித்துள்ளார்.




கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர், மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar-இடம் சமர்ப்பித்த மனுவில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து அரவிந்த் கூறுகையில், "அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். துக்க நாளாக அறிவித்தால் தான் தற்போதைய இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும். இப்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.




அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், "கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒழுக்கம் வரும். சமூக மாற்றம் வரும்போது தான் ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும்" என்றும் தெரிவித்தார்.




தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தராமல் இருப்பது, ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அரவிந்த், இன்னும் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.


Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...