முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தவும், இரண்டு நாட்களையும் துக்க நாளாக அறிவிக்கவும் கோரியுள்ளார்.


Coimbatore: முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்றும், அந்த நாட்களை துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐடி ஊழியர் ஒருவர் மனு அளித்துள்ளார்.




கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர், மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar-இடம் சமர்ப்பித்த மனுவில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து அரவிந்த் கூறுகையில், "அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். துக்க நாளாக அறிவித்தால் தான் தற்போதைய இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும். இப்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.




அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், "கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒழுக்கம் வரும். சமூக மாற்றம் வரும்போது தான் ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும்" என்றும் தெரிவித்தார்.




தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தராமல் இருப்பது, ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அரவிந்த், இன்னும் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.


Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...