முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தவும், இரண்டு நாட்களையும் துக்க நாளாக அறிவிக்கவும் கோரியுள்ளார்.


Coimbatore: முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்றும், அந்த நாட்களை துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐடி ஊழியர் ஒருவர் மனு அளித்துள்ளார்.




கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஐடி ஊழியர், மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar-இடம் சமர்ப்பித்த மனுவில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.




இது குறித்து அரவிந்த் கூறுகையில், "அந்த இரண்டு நாட்களையும் துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். துக்க நாளாக அறிவித்தால் தான் தற்போதைய இளைஞர்களுக்கு அது பற்றி தெரியும். இப்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.




அரசியல் மாற்றம் என்பது சமூக மாற்றமாக மாறாது என்று குறிப்பிட்ட அவர், "கல்வி மற்றும் விழிப்புணர்வை சமூக மாற்றமாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒழுக்கம் வரும். சமூக மாற்றம் வரும்போது தான் ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறையும்" என்றும் தெரிவித்தார்.




தற்போதைய முதல்வர் ஓட்டுக்கு பணம் தராமல் இருப்பது, ஜாதியின்றி வாக்களிப்பது போன்ற சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்ட அரவிந்த், இன்னும் அதிக விஷயங்களை செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...