கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.
Coimbatore:
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (26.05.2026) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டம் மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறைசார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (26.05.2026) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டம் மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறைசார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.