கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் எம்.ஜி.ரோடு, பீளமேடு, குறிச்சி, எஸ்.என்.பாளையம், மார்ச்சிநாயக்கன்பாளையம் மற்றும் தளக்கரை முத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை நகரில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 21.05.2026 அன்று பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதल் மாலை 4 மணி வரை ஐந்து முக்கிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்




எம்.ஜி.ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், எம்.ஜி.ரோடு, SIHS காலனி, காவேரி நகர், J.J நகர் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருக்கும். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே தங்களின் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.




பீளமேடு துணை மின் நிலையம்




பீளமேடு துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் சாலை, புளியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி சாலையின் ஒரு பகுதி, மீனா எஸ்டேட் மற்றும் உடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாது.




குறிச்சி துணை மின் நிலையம்




குறிச்சி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளால் சிட்கோ, சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, போத்தனூரின் ஒரு பகுதி, ஈச்சனாரி, குறிச்சி, ஏஐசி காலனி, ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.




எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையம்




எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேளாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.




மார்ச்சிநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்




மார்ச்சிநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் மார்ச்சிநாயக்கன்பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பியாகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி பகுதிகளில் மின்நிறுத்தம் இருக்கும்.




தளக்கரை முத்தூர் துணை மின் நிலையம்




தளக்கரை முத்தூர் துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளால் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டிணம், தேவம்பாடி, வள்ளையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே காலனி மற்றும் வெங்கடேசா காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருக்கும்.




மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அனைத்து பகுதிகளிலும் மின்சார பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படும். வானிலை மற்றும் பிற காரணங்களால் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால் மின் விநியோகம் மீட்டமைக்கப்படும். பொதுமக்கள் இதற்கேற்ப தங்களின் நாளாந்த பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...