கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


கோவை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் சூழலில், கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கிடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அரசியல் இயக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த மனக்கசப்புகள் மற்றும் சில சம்பவங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி அமைதியாக செயல்பட முயன்றபோதும், தற்போதைய சூழலில் முழுமையான மனநிறைவுடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்ட ஆலோசனை மற்றும் மனப்போராட்டத்திற்குப் பிறகு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையனை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...