கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர். பிஸ்டல் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.


Coimbatore: சென்னை குருநானக் கல்லூரி பயிற்சி மையத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் சிறப்பான வெற்றி பெற்று மொத்தம் 168 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.



10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ரைபிள் கிளப்புகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் செயலாளரும் சீனியர் ஷூட்டருமான Venkatasalam தலைமையில் ரைபிள் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி சுமார் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 40 தங்கம், 18 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களை வென்றனர்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் பயிற்சியாளர் Arun தலைமையில் 23 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 41 தங்கம், 28 வெள்ளி, 16 வெண்கலம் என 85 பதக்கங்களை வென்றனர்.



மேலும் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவை பிஸ்டல் வீரர்கள் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இருந்து 60 வீரர்கள் தென் மாநில அளவிற்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா கோவை ரைபில் கிளப் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை ரைபில் கிளப் அசோசியேஷன் செயலாளரும், சர்வதேச ரைபில் பயிற்சியாளருமான Venkatasalam, அசோசியேஷன் துணை செயலாளர் Aparna Vasanth Kumar, அசோசியேஷன் பொருளாளர் Manivanan உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர்களையும் பயிற்சியாளர்கள் Arun மற்றும் Prem Sai ஆகியோரை பாராட்டினர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...