கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


கோவை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் சூழலில், கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவராக இருந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கிடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் வழக்கறிஞர் வினீத், அரசியல் இயக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவி வந்த மனக்கசப்புகள் மற்றும் சில சம்பவங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி அமைதியாக செயல்பட முயன்றபோதும், தற்போதைய சூழலில் முழுமையான மனநிறைவுடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்ட ஆலோசனை மற்றும் மனப்போராட்டத்திற்குப் பிறகு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக அரசில் அமைச்சராக உள்ள செங்கோட்டையனை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...