தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உறுதிமொழியை வாசிக்க, கோவை வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
கோவை: தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளிக் காட்சி மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மேற்கு மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பங்கேற்றார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார்.

தொடர்ந்து, பெரிய எல்.இ.டி. திரையில் முதல்வரின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர் வாசித்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்றனர்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 1,500-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன், போதைப் பொருட்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி. கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளிக் காட்சி மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மேற்கு மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பங்கேற்றார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார்.
தொடர்ந்து, பெரிய எல்.இ.டி. திரையில் முதல்வரின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர் வாசித்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்றனர்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 1,500-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன், போதைப் பொருட்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி. கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.