திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tiruppur: திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், அவருக்கு அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணி கிடைத்துள்ளது.



இன்று அதிகாலை 4 மணிக்கு தொரவலூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் சேர வேண்டியிருந்ததால், இரவே பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய தனியார் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து அங்கு நிற்பதை கண்டு, அதன் முன்பாக துண்டு விரித்து படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை பயணிகள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்ல இயக்கியபோது, பேருந்தின் முன்பாக படுத்திருந்த சூர்யாவை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் சக்கரம் சூர்யா மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயது நடத்துனர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...