திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tiruppur: திருப்பூரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், அவருக்கு அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணி கிடைத்துள்ளது.



இன்று அதிகாலை 4 மணிக்கு தொரவலூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் சேர வேண்டியிருந்ததால், இரவே பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய தனியார் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து அங்கு நிற்பதை கண்டு, அதன் முன்பாக துண்டு விரித்து படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்தை பயணிகள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்ல இயக்கியபோது, பேருந்தின் முன்பாக படுத்திருந்த சூர்யாவை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தின் சக்கரம் சூர்யா மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயது நடத்துனர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...