சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும் இச்சேவையை கொங்கு குளோபல் போரம் வரவேற்றுள்ளது. போத்தனூர் சந்திப்பிலும் ரயில் நிற்கும்.


Coimbatore: கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 13ம் தேதி முதல் 31ம் தேதி வரை இயங்கும் இந்த சேவையை தொழில்துறை அமைப்பான கொங்கு குளோபல் போரம் வரவேற்றுள்ளது.






சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06023) மே மாதத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளான 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய வழித்தடங்களில் இச்சேவை இயங்கும்.




திரும்பும் பயணத்தில், போத்தனூர் - சென்னை ரயில் (வண்டி எண் 06024) வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான மே 14, 17, 21, 24, 28, 31 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். இரு ரயில்களும் போத்தனூர் சந்திப்பு மற்றும் கோவை சந்திப்பு ஆகிய இரு நிலையங்களிலும் நின்று செல்லும்.




இச்சேவை குறித்து கொங்கு குளோபல் போரம் வெளியிட்ட அறிக்கையில், "கோடை விடுமுறை காலம் என்பதால் சென்னை - கோவை இடையே அதிகப்படியான பயணிகள் பயணம் செய்கின்றனர். சிறப்பு ரயில் சேவைக்கான தேவை உள்ள சூழலில் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த சேவை பயணிகள் பலருக்கும் உதவிகரமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.




"ரயில்கள் போத்தனூர் சந்திப்பு மற்றும் கோவை சந்திப்பு நிலையங்களில் நின்று செல்வதால், நகருக்குள் எளிதாக பயணிகள் வரமுடியும். நகரில் இருந்து எளிதில் பிற இடங்களுக்கு செல்ல பொது போக்குவரத்து வசதிகள் உள்ளதால் பயணங்கள் எளிதாக்கப்படும்" என கொங்கு குளோபல் போரம் மேலும் தெரிவித்துள்ளது.




போத்தனூர் சந்திப்பில் உள்ள பிளாட்பார்ம்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. கோடை சீசனில் அதிகரித்த பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவை பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...