சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும் இச்சேவையை கொங்கு குளோபல் போரம் வரவேற்றுள்ளது. போத்தனூர் சந்திப்பிலும் ரயில் நிற்கும்.


Coimbatore: கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 13ம் தேதி முதல் 31ம் தேதி வரை இயங்கும் இந்த சேவையை தொழில்துறை அமைப்பான கொங்கு குளோபல் போரம் வரவேற்றுள்ளது.






சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06023) மே மாதத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளான 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய வழித்தடங்களில் இச்சேவை இயங்கும்.




திரும்பும் பயணத்தில், போத்தனூர் - சென்னை ரயில் (வண்டி எண் 06024) வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான மே 14, 17, 21, 24, 28, 31 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். இரு ரயில்களும் போத்தனூர் சந்திப்பு மற்றும் கோவை சந்திப்பு ஆகிய இரு நிலையங்களிலும் நின்று செல்லும்.




இச்சேவை குறித்து கொங்கு குளோபல் போரம் வெளியிட்ட அறிக்கையில், "கோடை விடுமுறை காலம் என்பதால் சென்னை - கோவை இடையே அதிகப்படியான பயணிகள் பயணம் செய்கின்றனர். சிறப்பு ரயில் சேவைக்கான தேவை உள்ள சூழலில் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த சேவை பயணிகள் பலருக்கும் உதவிகரமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.




"ரயில்கள் போத்தனூர் சந்திப்பு மற்றும் கோவை சந்திப்பு நிலையங்களில் நின்று செல்வதால், நகருக்குள் எளிதாக பயணிகள் வரமுடியும். நகரில் இருந்து எளிதில் பிற இடங்களுக்கு செல்ல பொது போக்குவரத்து வசதிகள் உள்ளதால் பயணங்கள் எளிதாக்கப்படும்" என கொங்கு குளோபல் போரம் மேலும் தெரிவித்துள்ளது.




போத்தனூர் சந்திப்பில் உள்ள பிளாட்பார்ம்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. கோடை சீசனில் அதிகரித்த பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவை பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...