2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.


Coimbatore: நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் பல மாநிலங்களில் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற NEET தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு, தேர்விற்காக பல மாதங்கள் தீவிரமாக தயாராகியிருந்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களிடம் கூடுதல் மன அழுத்தத்தையும், மருத்துவக் கல்லூரி சேர்க்கை செயல்முறையில் தாமதத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது..

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...