திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மல் தொலைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் (NEET) தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.



கடந்த 26ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3,608 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு, இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நாளான இன்று காலை 10 மணி முதலே மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மையங்களுக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் சென்ற பிறகு, பெற்றோர்கள் வெளியே செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், மாலை 5:30 மணிக்கு தேர்வு முடிந்த பின் வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் தேர்வு மையத்திற்கு வந்த திருப்புரை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி, சோதனையின் போது கம்மல் அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் அவசரமாக அதை கழற்ற முயன்றார். அப்போது ஒரு பவுன் கம்மல் கீழே விழுந்து தொலைந்தது.

இதனால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் பதற்றமடைந்து தேடத் தொடங்கினர். அங்கு இருந்த பொதுமக்களும் உதவியுடன் தேடிய நிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கம்மல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...