திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மல் தொலைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் (NEET) தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.



கடந்த 26ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3,608 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு, இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நாளான இன்று காலை 10 மணி முதலே மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மையங்களுக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் சென்ற பிறகு, பெற்றோர்கள் வெளியே செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், மாலை 5:30 மணிக்கு தேர்வு முடிந்த பின் வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் தேர்வு மையத்திற்கு வந்த திருப்புரை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி, சோதனையின் போது கம்மல் அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் அவசரமாக அதை கழற்ற முயன்றார். அப்போது ஒரு பவுன் கம்மல் கீழே விழுந்து தொலைந்தது.

இதனால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் பதற்றமடைந்து தேடத் தொடங்கினர். அங்கு இருந்த பொதுமக்களும் உதவியுடன் தேடிய நிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கம்மல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...