கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்களை வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அங்கு சென்ற திமுகவினர், டோக்கன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கையும் களவுமாக பிடித்து, அந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டோக்கன்கள், அதிமுக முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் குமார் தலைமையில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பிஆர்ஜி அருண்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியகுமார்போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...