கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக திமுக அரசை விமர்சித்து பேசினார்.


பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்த, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் மாநிலத்தலைசர்அண்ணாமலை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் அலையை உருவாக்கி வருவதாக கூறினார்.



அவர் தொடர்ந்து பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர டிஜிபி நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. பொறுப்பு டிஜிபி கூறும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காத நிலை உருவாகியுள்ளது. மேலும், அந்த பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றாலும் கூட, அதற்குப் பதிலாக மீண்டும் பொறுப்பு டிஜிபியையே நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக அரசின் நிர்வாக குறைபாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று குற்றம்சாட்டினார்.



மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைச் சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதவி மற்றும் நாற்காலி மட்டுமே முக்கியம். ஆட்சி நடத்த இயலாத நிலையில் இருந்தால், பொறுப்பு முதலமைச்சரை நியமித்திருக்கலாம்,” எனவும் அவர் விமர்சித்தார்.

அண்ணாமலை தனது உரையில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். “பொறுப்பு டிஜிபி நியமனத்தின் விளைவாக மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8008 கொலை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.



அதே நேரத்தில், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார். “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்களது கட்சிப் பெயரையே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்சி திமுகவின் கொத்தடிமை கட்சியாக செயல்படுகிறது. அவர்களின் கட்சிக் கொடி, அடையாளங்கள் மட்டுமல்லாமல், பொதுச் செயலாளர் ஈஸ்வரனின் புகைப்படத்தைக் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது,” என்று கூறினார்.

முடிவில், “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான கட்சியும் ஆட்சியும் திமுக தான்,” என்று கடுமையாக விமர்சித்து தனது உரையை அண்ணாமலை நிறைவு செய்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...