கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக திமுக அரசை விமர்சித்து பேசினார்.


பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்த, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் மாநிலத்தலைசர்அண்ணாமலை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் அலையை உருவாக்கி வருவதாக கூறினார்.



அவர் தொடர்ந்து பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர டிஜிபி நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. பொறுப்பு டிஜிபி கூறும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காத நிலை உருவாகியுள்ளது. மேலும், அந்த பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றாலும் கூட, அதற்குப் பதிலாக மீண்டும் பொறுப்பு டிஜிபியையே நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக அரசின் நிர்வாக குறைபாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று குற்றம்சாட்டினார்.



மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைச் சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதவி மற்றும் நாற்காலி மட்டுமே முக்கியம். ஆட்சி நடத்த இயலாத நிலையில் இருந்தால், பொறுப்பு முதலமைச்சரை நியமித்திருக்கலாம்,” எனவும் அவர் விமர்சித்தார்.

அண்ணாமலை தனது உரையில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். “பொறுப்பு டிஜிபி நியமனத்தின் விளைவாக மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8008 கொலை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.



அதே நேரத்தில், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார். “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்களது கட்சிப் பெயரையே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்சி திமுகவின் கொத்தடிமை கட்சியாக செயல்படுகிறது. அவர்களின் கட்சிக் கொடி, அடையாளங்கள் மட்டுமல்லாமல், பொதுச் செயலாளர் ஈஸ்வரனின் புகைப்படத்தைக் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது,” என்று கூறினார்.

முடிவில், “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான கட்சியும் ஆட்சியும் திமுக தான்,” என்று கடுமையாக விமர்சித்து தனது உரையை அண்ணாமலை நிறைவு செய்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...