கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்கள் கைகளில் குறுத்தோலைகளை ஏந்தி, ஓசானா கீதங்களை இசைக்க, ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. முக்கிய வீதிகளில் மாபெரும் பேரணி வலம் வந்தது.


Coimbatore: உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைபிடிக்கப்படும் நிலையில், அதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று கோவையில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.



கோவை மாநகரின் அடையாளமான டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில், அதிகாலையில் திரளான இறைமக்கள் கைகளில் குறுத்தோலைகளை ஏந்தி, "ஓசானா" கீதங்களை இசைக்க, திருப்பாடுகள் வாசிக்கப்பட்டு, சிறப்புத் திருப்பலி ஆயர் தலைமையில் நடைபெற்றது.



பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த மாபெரும் பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தபோது, மக்கள் தங்கள் கைகளில் இருந்த குறுத்தோலைகளை அசைத்து இயேசுவின் எருசலேம் வருகையை நினைவு கூர்ந்தனர். இந்த திருப்பலியின் போது அமைதி மற்றும் தியாகத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் புனித வாரத்தின் தொடர்ச்சியாக பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பெருவிழா ஆகியவற்றுக்கான விரிவான ஏற்பாடுகளை தேவாலய நிர்வாகம் செய்துள்ளது. கோவையின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் இந்த திருநாளில் தங்களின் பாவப் பரிகாரத்திற்காகவும், உலக அமைதிக்காகவும் உருக்கமாக வேண்டிக் கொண்டனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...