மடத்துக்குளம் அருகே வேடபட்டி ஊராட்சியில் 10 லட்சம் முறைகேடு: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முறைகேடு குறித்து புகார் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தில் அருகில் உள்ள வேடபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முறைகேடாக அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை திண்டுக்கல் மாவட்டத்தை போல அனைத்து விவசாயிகளுக்கும் தென்னைக்கு வட்ட பாத்தி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 100 கோடி ஒதுக்கி விரைவில் சீரமைத்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் அரசு ஊழியருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியது விதிமீறல் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் 10 லட்சத்தை திரும்ப பெறப்படும் எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு எழுதிக் கொடுத்தனர்.



தொடந்து விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் தற்காலிமாக கை விடபட்டது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...