மடத்துக்குளம் அருகே வேடபட்டி ஊராட்சியில் 10 லட்சம் முறைகேடு: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முறைகேடு குறித்து புகார் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தில் அருகில் உள்ள வேடபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முறைகேடாக அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை திண்டுக்கல் மாவட்டத்தை போல அனைத்து விவசாயிகளுக்கும் தென்னைக்கு வட்ட பாத்தி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 100 கோடி ஒதுக்கி விரைவில் சீரமைத்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் அரசு ஊழியருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியது விதிமீறல் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் 10 லட்சத்தை திரும்ப பெறப்படும் எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு எழுதிக் கொடுத்தனர்.



தொடந்து விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் தற்காலிமாக கை விடபட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...