மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி: பவானி ஆற்றில் குதித்து தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார்

மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்ப பவானி ஆற்றில் குதித்தார். எலும்பு முறிவு காரணமாக பிடிபட்ட அவர் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று பவானி ஆற்றில் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிக்கினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டார்னிங்டன் பகுதியைச் சேர்ந்த சசி (38) என்ற பெயிண்டர், தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளின் கிளட்ச் வயர் அறுந்துவிட்டது. அப்போது அவ்வழியே வந்த இளைஞர்கள் மூவர் உதவி செய்தனர். பின்னர் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.



சசி பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு மிரட்டினர். வாக்குவாதத்தின் போது, சூர்யா என்ற இளைஞர் கத்தியால் சசியை குத்தினார். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றனர். சசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சூர்யாவை (21) போலீசார் தேடி வந்தனர். இன்று மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் அவரைக் கண்டுபிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற சூர்யா, பவானி ஆற்றில் குதித்தார்.

குதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...