பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் மீது குடியிருப்புவாசி தாக்குதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட 45 வயது நபரை குடியிருப்புவாசி ஒருவர் தாக்கி விரட்டினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், ரங்கம்மாள் கோவில் தெருவில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தெருவில் நின்று கொண்டு, கோலமிடும் பெண்கள், கடைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து தனது கால்சட்டையைக் கழற்றி நடுவீதியில் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர், அந்த நபரை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

விசாரணையில், இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...