பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் மீது குடியிருப்புவாசி தாக்குதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட 45 வயது நபரை குடியிருப்புவாசி ஒருவர் தாக்கி விரட்டினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், ரங்கம்மாள் கோவில் தெருவில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தெருவில் நின்று கொண்டு, கோலமிடும் பெண்கள், கடைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து தனது கால்சட்டையைக் கழற்றி நடுவீதியில் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர், அந்த நபரை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

விசாரணையில், இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...