பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் மீது குடியிருப்புவாசி தாக்குதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட 45 வயது நபரை குடியிருப்புவாசி ஒருவர் தாக்கி விரட்டினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், ரங்கம்மாள் கோவில் தெருவில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தெருவில் நின்று கொண்டு, கோலமிடும் பெண்கள், கடைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து தனது கால்சட்டையைக் கழற்றி நடுவீதியில் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர், அந்த நபரை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

விசாரணையில், இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...