மின்சார வாரியத்தின் பவர் பேக்டர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி போசியா தொழில் கூட்டமைப்பு மனு

கோவையில் போசியா தொழில் கூட்டமைப்பு, சிறு தொழில் முனைவோருக்கு விதிக்கப்படும் பவர் பேக்டர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி மின்சார வாரியத்திடம் மனு அளித்தது. முதல்வரின் 3ஏ1 டேரிப் உத்தரவை அமல்படுத்தவும் வலியுறுத்தினர்.



Coimbatore: கோவை மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் போசியா தொழில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மனு அளித்தனர். சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு பவர் பேக்டர் காரணமாக விதிக்கப்படும் கடுமையான அபராதத்தை ரத்து செய்யவும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி தரவும் இந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

18 கிலோ வாட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் தொழில் முனைவோருக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பவர் பேக்டர் அபராதம் விதிக்கப்படுவதாக தொழில் முனைவோர்கள் குற்றம் சாட்டினர். இந்த அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக இருப்பதால், தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



தமிழக முதல்வரின் உத்தரவின்படி, 12 கிலோ வாட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களை 3ஏ1 டேரிப் கீழ் கொண்டு வர வேண்டும். ஆனால், மின்சார வாரியம் இந்த உத்தரவை அமல்படுத்துவதில் கால தாமதம் செய்து வருவதாக போசியா தொழில் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டினர். முதல்வரின் இந்த உத்தரவை மின்சார வாரியம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனுவின் மூலம், சிறு தொழில் முனைவோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பவர் பேக்டர் அபராதத்தை ரத்து செய்யவும், முதல்வரின் உத்தரவை அமல்படுத்தவும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கும் என போசியா தொழில் கூட்டமைப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...