மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் கைது செய்யப்பட்டார். பல பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் பயணித்த கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக், தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு மெமோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணம் செய்த அப்துல் ரஜாக், ஒரு கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்ததாகவும், அவரை அருவருக்கத்தக்க வகையில் பார்த்ததாகவும், மேலும் அவர் மீது உரசி கொண்டே வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், அந்த ரயிலில் பயணித்த பல பெண்களும் இதே மாதிரி தங்களிடமும் அவர் நடந்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அப்துல் ரஜாக் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...