பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மரக்கன்றுகள் நடும் விழா

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பாஜக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சித்தாபுதூர், நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மேற்பார்வை குழு தலைவர் H. ராஜா, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் Prof கனக சபாபதி மற்றும் கோவை மாவட்ட தலைவர் ஜே. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.





இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பாஜகவில் இணைந்தனர்.



வள்ளியம்மாள் பூங்கா, 80 அடி சாலை, இராமநாதபுரம் பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இங்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பூங்கா சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் H. ராஜா, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...