துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டம்

கோவை துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை துடியலூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



விழாவில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.



தலைமை செயற்குழு உறுப்பினர் T P. சுப்ரமணியன், துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், 2வது வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பெரியார், அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 2வது வார்டு கவுன்சிலர் புஷ்பமணி அருள் குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பகுதி கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சன் சோமு, மனோன்மணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, ஆனந்தன், வெற்றிச்செல்வன், அருக்காணி, ctc சுப்ரமணியன், டிரைவர் சுப்பிரமணியன், பழனிச்சாமி, வாசு, T R. ராஜேந்திரன், ரவி, சின்னசாமி, செல்வா ஆகியோரும் பங்கேற்றனர். மகளிர் அணியை சார்ந்த ஷோபனா, கோமதி, தனபாக்கியம், லட்சுமி உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவினை 2வது வட்ட கழகத் துணைச் செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...