வீரபாண்டியில் மத்திய அரசு அச்சகத்தின் வழிப்பாதை இணைப்புக்கு அதிமுக கோரிக்கை

கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் மத்திய அரசு அச்சகத்தின் 15 அடி வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மத்திய அரசின் அச்சகத்திற்கு சொந்தமான 15 அடி அகல வழிப்பாதையை ஏற்கனவே உள்ள பாதையுடன் இணைக்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ் மற்றும் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் ஆகியோர் இணைந்து இன்று (செப்டம்பர் 14) இந்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பில் பெரியநாயக்கன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KVN. ஜெயராமன், நகர கழக செயலாளர்கள் M. ராம்தாஸ், K. குருந்தசாலம், துணை செயலாளர் N. ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழிப்பாதை இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதியின் வளர்ச்சிக்கும் உதவும் என்று அதிமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...