பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தில் மதுபான கூடத்தை இடமாற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு.


கோவை: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று (செப்டம்பர் 13) சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை அருகே, திவான்சாபுதூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில், தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மற்றொரு மதுபானக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்களும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுந்த பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மதுபான கூடத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...