கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள், வணிக வளாகம், பள்ளி பராமரிப்பு மற்றும் தார்சாலை அமைக்கும் திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இன்று வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பல்வேறு அபிவிருத்தி பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.

வடக்கு மண்டலம் வார்டு எண் 1-க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கணுவாய் சாலையில் உள்ள பார்க் சிட்டி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டார். வார்டு எண் 20-க்குட்பட்ட சக்தி சாலை, ராமகிருஷ்ணாபுரம், லட்சுமி கார்டன் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் சாலையின் மைய தடுப்பு சுவர் பகுதியில் அமைந்துள்ள தெருவிளக்குகளை மாற்றி அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கட்டா ரவி தேஜா அறிவுறுத்தினார். இதன்மூலம் போக்குவரத்து பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மண்டலம் வார்டு எண் 67-க்குட்பட்ட காட்டூர் பட்டேல் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை ஆணையர் நேரில் பார்வையிட்டார். அங்கு ஒரு கடையை நியாய விலை கடைக்கு ஒதுக்கீடு செய்திட அறிவுறுத்தினார். இது பொதுமக்களுக்கு நல்ல பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே பகுதியில் அமைந்துள்ள சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பள்ளியில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்திடவும் தெரிவித்தார். மாணவிகளின் கல்வி சூழல் மேம்படுத்தப்படும்.
வார்டு எண் 84-க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ரோஜா கார்டன், என்.எஸ்.கார்டன், மஸ்ஜித் காலனி ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைத்திட திட்ட மதிப்பீடு தயார் செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது தலைமை பொறியாளர் விஜயகுமார், துணை மாநகரப் பொறியாளர் எழில், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மண்டல உதவி ஆணையர்கள் மோகனசுந்தரி, கணேசன், மகேஷ்கனகராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் யோகசித்ரா, சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கீதாதேவி, மாமன்றம் அலிமாபேகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ், இளம்பொறியாளர் ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வடக்கு மண்டலம் வார்டு எண் 1-க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கணுவாய் சாலையில் உள்ள பார்க் சிட்டி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டார். வார்டு எண் 20-க்குட்பட்ட சக்தி சாலை, ராமகிருஷ்ணாபுரம், லட்சுமி கார்டன் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் சாலையின் மைய தடுப்பு சுவர் பகுதியில் அமைந்துள்ள தெருவிளக்குகளை மாற்றி அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கட்டா ரவி தேஜா அறிவுறுத்தினார். இதன்மூலம் போக்குவரத்து பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மண்டலம் வார்டு எண் 67-க்குட்பட்ட காட்டூர் பட்டேல் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை ஆணையர் நேரில் பார்வையிட்டார். அங்கு ஒரு கடையை நியாய விலை கடைக்கு ஒதுக்கீடு செய்திட அறிவுறுத்தினார். இது பொதுமக்களுக்கு நல்ல பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே பகுதியில் அமைந்துள்ள சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பள்ளியில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்திடவும் தெரிவித்தார். மாணவிகளின் கல்வி சூழல் மேம்படுத்தப்படும்.
வார்டு எண் 84-க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ரோஜா கார்டன், என்.எஸ்.கார்டன், மஸ்ஜித் காலனி ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைத்திட திட்ட மதிப்பீடு தயார் செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது தலைமை பொறியாளர் விஜயகுமார், துணை மாநகரப் பொறியாளர் எழில், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மண்டல உதவி ஆணையர்கள் மோகனசுந்தரி, கணேசன், மகேஷ்கனகராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் யோகசித்ரா, சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கீதாதேவி, மாமன்றம் அலிமாபேகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ், இளம்பொறியாளர் ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.