பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தில் மதுபான கூடத்தை இடமாற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு.


கோவை: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று (செப்டம்பர் 13) சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை அருகே, திவான்சாபுதூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில், தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மற்றொரு மதுபானக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்களும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுந்த பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மதுபான கூடத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...