கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற்றது. எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பள்ளியிலிருந்து 110 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். துணைவேந்தர் Dr S Ravi, முதன்மைச் செயல் அலுவலர் K Murugaiah ஆகியோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழக நிகழ்த்துக்கலைப்புலத்தின் இசைத்துறை சார்பில் இந்திய அறிவு அமைப்பின் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா 07.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இசைத்துறை முதன்மையர் Prof Dr Sajitha Suku வரவேற்புரை வழங்கினார்.




விழாவில் பேசிய T K Ramesh, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்த திருப்புகழ் பயிலரங்கமானது பாராட்டுக்குரிய முயற்சி என்று குறிப்பிட்டார். கற்பகம் பல்கலைக்கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் K Murugaiah விழாவில் முன்னிலை வகித்தார்.






துணைவேந்தர் Dr S Ravi தமது வாழ்த்துரையில், கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் கல்விச்சேவைக்கு மேலும் அணி சேர்க்கின்ற வகையில் நிகழ்த்துக்கலைப்புலத்தின் இசைத்துறையானது செயல்படுவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.




நிகழ்த்துக்கலைப்புலத்தின் முதன்மையர் Dr V Janagamaayadevi தலைமையில், Dr Praseeda Pal, Dr Sajitha Suku, Meera Priyadarshini, Sruthilaya R, Dr Indumathi J மற்றும் Dr Sandhya Shankar Jayaram ஆகிய பேராசிரியர்கள் ஒருநாள் பயிலரங்கை ஒருங்கிணைத்தனர்.




எட்டிமடையில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பள்ளியிலிருந்து 110 மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயனுற்றனர். அவர்கள் பெருங்குழுவினராகப் பாடிய திருப்புகழ் பண்ணிசை விழாவுக்குச் சிறப்பு சேர்த்தது.




பதிவாளர் Dr BV Pradeep, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக இசைத்துறையின் பேராசிரியர் Dr Praseeda Pal நன்றியுரை வழங்கினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...