மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீர் தீ விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுயாதீனமாக தப்பித்தார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



கோவை: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரி ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, அரியலூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று, உதகை சாலையில் சின்ன பள்ளி வாசல் அருகே வந்தபோது திடீரென முன்பக்கத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, உடனடியாக லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கி தப்பினார். பின்னர் லாரியின் முன்பகுதி வேகமாக எரியத் தொடங்கியது.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். லாரியில் திடீரென எப்படி தீ பற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...