மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீர் தீ விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுயாதீனமாக தப்பித்தார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



கோவை: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரி ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, அரியலூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று, உதகை சாலையில் சின்ன பள்ளி வாசல் அருகே வந்தபோது திடீரென முன்பக்கத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, உடனடியாக லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கி தப்பினார். பின்னர் லாரியின் முன்பகுதி வேகமாக எரியத் தொடங்கியது.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். லாரியில் திடீரென எப்படி தீ பற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...