முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகள், கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக துவங்கியது.



இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 39,738 பேர் இப்போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 1,449, கல்லூரி மாணவர்கள் 16,809, பள்ளி மாணவர்கள் 18,679, பொதுப்பிரிவினர் 2,167, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள்) 654 பேர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு தொழில்நூட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, இராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய 9 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். தனி விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் மாநில போட்டிக்கு செல்வர். மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...