சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்றும் கல்விக் கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Coimbatore:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு குறைந்த வட்டி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன், விராசாத் கைவினை கலைஞர் கடன் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. திட்டம்-1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்டம்-2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருக்கலாம்.

திட்டம்-1-ன் கீழ் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கான விராசாத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

மூலப்பொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் பயன்படுத்தப்படலாம்.

சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு திட்டம்-1-ன் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் வட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்காக கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. திட்டம்-1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவியர்களுக்கு 5 சதவீதமும் வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன் மற்றும் கைவினை கலைஞர் கடன்களுக்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...