கோவை மாநகராட்சி ஆணையர் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கிழக்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 09.09.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சுகாதார நிலையம், பொது கழிவறை, தங்கும் விடுதி உள்ளிட்ட பல திட்டங்களை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், 09.09.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம் வார்டு எண் 54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலையத்தையும்,



வார்டு எண் 24க்குட்பட்ட கெகசியா பகுதியில் தூய்மை இந்தியா (2.0) திட்டத்தின்கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொது கழிவறையையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 57க்குட்பட்ட பட்டனம் சாலை, காமராஜர் நகரில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருவதையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.





அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 57க்குட்பட்ட ஓண்டிப்புதூர், சிந்து நகரில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்த ஆணையர், மக்காத குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதே வளாகத்தில் செயல்படும் வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 8க்குட்பட்ட காளப்பட்டி, சரவணம்பட்டி சாலை முதல் என்.ஜி.பி. கல்லூரி வரை 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் புதிய இணைப்புச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.





வார்டு எண் 61க்குட்பட்ட சிங்காநல்லூர், ஆணையங்காடு சாலை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், மற்றும் திருச்சி சாலை, சிங்காநல்லூர் குளத்தின் வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம், விஜயகுமார், சாந்தாமணி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார், முத்துக்குமார், ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...