கோவை: விநாயகர் சிலை கரைப்பு இடங்களின் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பொதுமக்கள் மற்றும் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை:

1. முத்தண்ணன் குளம்

2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)

3. அம்பராம் பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்)

4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு)

5. ஆச்சான் குளம்

6. நீலாம்பூர்

7. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்)

8. நடுமலை ஆறு

9. வால்பாறை

10. சாடிவயல்

11. வாளையார் அணை

12. குறிச்சிக்குளம்

13. குனியமுத்தூர் குளம்

14. சிங்காநல்லூர் குளத்தேரி

15. வெள்ளக்கிணறு குளம்

16. நாகராஜபுரம் குளம்

17. பிஏபி வடிகால்

18. நூற்றாண்டு பிரிவு

19. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்)

20. பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்)

மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...