கோவை: விநாயகர் சிலை கரைப்பு இடங்களின் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பொதுமக்கள் மற்றும் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை:

1. முத்தண்ணன் குளம்

2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)

3. அம்பராம் பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்)

4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு)

5. ஆச்சான் குளம்

6. நீலாம்பூர்

7. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்)

8. நடுமலை ஆறு

9. வால்பாறை

10. சாடிவயல்

11. வாளையார் அணை

12. குறிச்சிக்குளம்

13. குனியமுத்தூர் குளம்

14. சிங்காநல்லூர் குளத்தேரி

15. வெள்ளக்கிணறு குளம்

16. நாகராஜபுரம் குளம்

17. பிஏபி வடிகால்

18. நூற்றாண்டு பிரிவு

19. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்)

20. பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்)

மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...