கோவையில் அதிவேக வாகனம் ஓட்டிய 17 பேர் மீது வழக்கு, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 17 இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிகவேகமாக ஓட்டுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் போலீஸார் செப்டம்பர் 6 அன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த 17 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், "இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். கோவை மாநகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.

கோவை மாநகரில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து, பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...