வீட்டில் நூலகம் நடத்துவோருக்கு விருது: விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் வீட்டு நூலகம் நடத்துவோருக்கு விருது மற்றும் பரிசு வழங்க திட்டம். செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வீட்டில் நூலகம் நடத்துபவர்களுக்கான விருது மற்றும் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும். இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு வீட்டு நூலகத்தினை தேர்ந்தெடுத்து, ரூ.3000/- மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்துவரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தின் விவரங்களுடன் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் நூல்களின் எண்ணிக்கை, வகைகள், அரிய நூல்கள் விவரம், நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் தொடர்பு விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மாவட்ட நூலக அலுவலர், 1232, பெரியகடைவீதி, கோயம்புத்தூர் 641001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது அருகாமையில் உள்ள பொதுநூலக இயக்க நூலகத்தில் நேரில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...