கோவையில் வறுமையால் பெண் குழந்தையை விற்ற தாய் உள்பட மூவர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற தாய், இடைத்தரகர் மற்றும் வாங்கியவர் என மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்த 25 வயதான ஆதிகணேஷ் மற்றும் அவரது 22 வயதான மனைவி நந்தினி ஆகியோர் வறுமையின் காரணமாக தங்களது பெண் குழந்தையை விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக விற்க முடிவு செய்தனர். இதற்காக கஸ்தூரி பாளையம், சத்யா நகரைச் சேர்ந்த 42 வயதான இடைத்தரகர் தேவிகா என்பவர் உதவியுடன், கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் - அனிதா தம்பதியிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்ற தாய் நந்தினி, இடைத்தரகர் தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், பெண் குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று தேவிகா வேறு யாரிடமாவது குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...