கோவையில் வறுமையால் பெண் குழந்தையை விற்ற தாய் உள்பட மூவர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற தாய், இடைத்தரகர் மற்றும் வாங்கியவர் என மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்த 25 வயதான ஆதிகணேஷ் மற்றும் அவரது 22 வயதான மனைவி நந்தினி ஆகியோர் வறுமையின் காரணமாக தங்களது பெண் குழந்தையை விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக விற்க முடிவு செய்தனர். இதற்காக கஸ்தூரி பாளையம், சத்யா நகரைச் சேர்ந்த 42 வயதான இடைத்தரகர் தேவிகா என்பவர் உதவியுடன், கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் - அனிதா தம்பதியிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்ற தாய் நந்தினி, இடைத்தரகர் தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், பெண் குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று தேவிகா வேறு யாரிடமாவது குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...