கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, கல்வி கொடை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன், டாக்டர் சி.ராதகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன், மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் தொடக்க உரையாற்றினார். துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர், விஜய் ராவ், டிரவல்ஸ் ரமேஷ், ராமஜெயம், சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் அப்பு, விக்னேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...