கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, கல்வி கொடை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன், டாக்டர் சி.ராதகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன், மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் தொடக்க உரையாற்றினார். துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர், விஜய் ராவ், டிரவல்ஸ் ரமேஷ், ராமஜெயம், சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் அப்பு, விக்னேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...